10420
Visitor

நிகழ்ச்சி நிரல்

6-ஆம் ஆண்டு நிறைவு விழா

உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு


திருவள்ளுவர் ஆண்டு 2039


2008 ஆகஸ்டு 16 சனி

மதுரை

உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக இன்று (ஆகஸ்ட் 16 2008) அன்று மதுரையில் நடைபெற்றது.

மதுரை மாநகரில் உள்ள அரசரடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளி நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்கள் தி.க. சிவசங்கரன், கி.இராஜநாராயணன், எஸ்.பொன்னுதுரை (எஸ்.பொ), ஜே.வி கண்ணன், வே. தங்கவேலு (நக்கீரன்)ஆகியோருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.

இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சி. மகேந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், கவிஞர்கள் காசி. ஆனந்தன், இன்குலாப், மணியரசன், தியாகு, முனைவர் க. நெடுஞ்செழியன், பேரா. ஜெயராமன், முனைவர் தமிழண்ணல், பேரா. பர்வீன் சுல்தானா, எழுத்தாளர்கள் சூரியதீபன், அழகிய பெரியவன், மரு. இந்திரக்குமார் (இலண்டன்), கலைச் செல்வன் (மியான்மர்), திருமாவளவன் (மலேசியா), ஜான் மோசஸ், பொன்னீலன், நாடோடித் தமிழன்(மராட்டியம்), புகழேந்தி (கர்நாடகம்), பேரா. இராமமூர்த்தி (கர்நாடகம்), அரணமுறுவல், முனைவர் இராம சுந்தரம், மு. பாலசுப்பிரமணியம், சா. சந்திரேசன், இராசேந்திரசோழன், மெல்கியோர், பசுபதிபாண்டியன் உட்பட பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சேர்ந்த எழுத்தாளர்களும் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் எழுச்சியூட்டும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழின உணர்வாரள்கள் பெருந்திரளில் கூடியிருந்தனர்.

நிகழ்ச்சி நிரல்

Optimized to view in 800x600 with 16 bit color or higher mode.
Best viewed with Internet Explorer
3.x or later &
Netscape Communicator 4.x or later

Download Tamil Font to view our pages.
Copyright THENSEIDE 2002.